உள்ளூர் செய்திகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: பிருந்தா காரத்

Published On 2023-09-21 10:06 GMT   |   Update On 2023-09-21 10:06 GMT
  • தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம்.
  • வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.

நாமக்கல்:

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இதில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் சார்பில் விவாதம், தொகுப்புரை, அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன.

மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம். இந்த மசோதா நிறைவேறுவது கடினம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். அதற்குப் பின்னர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்யப்படும்.

தமிழக அரசு வழங்கி வரும் பெண்களுக்கான உரிமைத்தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று 3-வது நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

Tags:    

Similar News