உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.43 அடியாக உயர்வு

Published On 2022-11-09 04:49 GMT   |   Update On 2022-11-09 04:49 GMT
  • தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்கி வருகிறது.
  • பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்துகிறது.

அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,222 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 600 கன அடி இன்று முதல் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 300 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்கி வருகிறது.

இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 105 அடியை நெருங்கியதும் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்படும் என பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News