உள்ளூர் செய்திகள்
ஊத்துக்கோட்டையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- மாணவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் எழுதும் முறை கற்றுக் கொடுக்கப்பட்டது.
- ஆசிரியர்கள் துரைப்பாண்டியன், சரவணன், கோபிநாத், முகமது அக்பர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் எழுதும் முறை கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் கைதிகள் அறை, ஆயுதக் கிடங்கு, ஆவண காப்பு அறை, கணினி அறை, போலீஸ் ஓய்வு அறைகள் காண்பிக்கப்பட்டன.
இதில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சிவா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி, ஏட்டு மாதவன், பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாத், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன், ஆசிரியர்கள் துரைப்பாண்டியன், சரவணன், கோபிநாத், முகமது அக்பர் கலந்து கொண்டனர்.