உள்ளூர் செய்திகள்

அருப்புக்கோட்டையில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2022-12-11 14:42 IST   |   Update On 2022-12-11 14:42:00 IST
  • நகரின் முக்கிய பகுதியில் வங்கியின் முன்பு இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலை வடுகர்கோட்டை பகுதியில் ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம்.மையம் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அந்த ஏ.டி.எம். எந்திரம் உடைந்துள்ளதாக வங்கியின் அதிகாரிக்கு செல்போனில் தகவல் வந்தது. இதையடுத்து அவர் அதுகுறித்து உடனடியாக அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். மிஷின் உடைக்கப்பட்டு முன்பகுதி திறந்த நிலையில் இருந்துள்ளது. ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் எதுவும் திருட்டு போகவில்லை.

இதையடுத்து ஏ.டி.எம். மையத்தின் அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர் யார்? என கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

நகரின் முக்கிய பகுதியில் வங்கியின் முன்பு இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News