உள்ளூர் செய்திகள்

தாம்பரம் பகுதியில் கூடுதல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் தேவை- சட்ட சபையில் எஸ்.ஆர். ராஜா வலியுறுத்தல்

Published On 2023-03-27 10:25 GMT   |   Update On 2023-03-27 10:25 GMT
  • தாம்பரம் மாநகராட்சியான பிறகு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தி.மு.க. ஆட்சியில் வந்துள்ளது.
  • தாம்பரத்தில் போதுமான இட வசதி உள்ளதால், உயர்நீதிமன்ற கருத்துரு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

சென்னை:

சட்ட சபையில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா கேள்வி நேரத்தின் போது பேசுகையில், தாம்பரம் மாநகராட்சியான பிறகு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தி.மு.க. ஆட்சியில் வந்துள்ளது.

இப்போது செங்கல்பட்டு மாவட்டம் தனியாக உருவாக்கபட்டு உள்ளதால் தாம்பரம் பகுதியில் கூடுதல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அமைக்கபடுமா? என்றார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளிக்கையில், தாம்பரத்தில் போதுமான இட வசதி உள்ளதால், உயர்நீதிமன்ற கருத்துரு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Similar News