உள்ளூர் செய்திகள்

செய்யூர் அருகே புதுப்பட்டு ஏரியின் கரை உடைந்தது- 150 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கின

Published On 2022-12-13 14:31 IST   |   Update On 2022-12-13 14:31:00 IST
  • செய்யூர் பொதுப் பணித்துறை அதிகாரிகள் புதுப்பட்டு ஏரியை பார்வையிட்டனர்.
  • புதுப்பட்டு ஏரியன் கரைமுழுவதையும் அதிகாரிகள் பார்வையிட்டு பலப்படுத்த தேவயைான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மதுராந்தகம்:

செய்யூர் அருகே உள்ள புதுப்பட்டு ஊராட்சியில் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியால் சுற்றி உள்ள சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன.

தொடர்ந்து பெய்த கன மழையால் புதுப்பட்டு ஏரி முழுவதும் நிரம்பியது. ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஏரியின் மதகு அருகே கரை திடீரென உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது.

இதனால் ஏரி அருகே உள்ள சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஏரியின் கரை உடைந்தது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்தாஸ், பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். செய்யூர் பொதுப் பணித்துறை அதிகாரிகள் புதுப்பட்டு ஏரியை பார்வையிட்டனர். உடந்த கரையை அடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுப்பட்டு ஏரியன் கரைமுழுவதையும் அதிகாரிகள் பார்வையிட்டு பலப்படுத்த தேவயைான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News