உள்ளூர் செய்திகள்

தூங்கி கொண்டிருந்த நர்சிடம் தாலி செயின் பறிப்பு

Published On 2022-07-10 09:01 GMT   |   Update On 2022-07-10 09:01 GMT
  • வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்
  • இதுகுறித்து மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

மேச்சேரி:

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒர்க்‌ஷாப் காலனியை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 39). இவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ரவி (42).

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மோகனபிரியா, அவரது கணவர் ரவி ஆகியோர் வீட்டில தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பின்புற கதவு திறந்து இருந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து மோகனபிரியா அணிந்திருந்த 2 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.

உடனே விழித்து ெகாண்ட அவர் திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். உடனே கணவர் ரவியும் எழுந்து வந்தபோது மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து ரவி மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். வீட்டின் வெளியே தாலி கிடந்தது. அதை மீட்டு போலீசார் மோகனபிரியாவிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று அமரத்தானூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பூஜை அறையில் இருந்த ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர். அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள ராஜா என்பவரின் வீட்டிலும் கொள்ளைடிக்க முயன்றபோது சத்தம் கேட்டு ராஜா வெளியே வந்தபோது மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News