உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் மழை

Published On 2022-06-16 09:18 GMT   |   Update On 2022-06-16 09:18 GMT
பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் மழையால் சாலையோர கடைக்காரர்கள் பாதிப்படைந்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 6 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து கனமழை பெய்தது.

கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசண நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

மழையின் காரணமாக சாலையோரத்தில் போடப்பட்டிருந்த டிபன் கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

Tags:    

Similar News