உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் திடீர் மோதல்

Published On 2023-03-03 09:29 GMT   |   Update On 2023-03-03 09:29 GMT
  • சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி
  • அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

சேலம்:

சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 22), விசைத்தறி தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள பூலாவரி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த லோகநாதன் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் சாமி ஆட வந்துள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், லோகு என்ற லோகநாதன் (25), சச்சின் (20) ஆகிய 2 பேர் மீதும் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News