உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூரில் 2-வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்

Published On 2023-01-31 08:22 GMT   |   Update On 2023-01-31 08:22 GMT
  • அனிதா மீனா நேற்று இரவு வீட்டின் 2-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
  • பலத்த காயம் அடைந்த அனிதாமீனாவுக்கு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனிதா மீனா (வயது8) தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அனிதா மீனா நேற்று இரவு வீட்டின் 2-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தாள். இதில் பலத்த காயம் அடைந்த அனிதாமீனாவுக்கு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News