உள்ளூர் செய்திகள்

நகை பறிப்பில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் பயன்படுத்திய திருட்டு மோட்டார் சைக்கிள்: உரியவரை கண்டறிந்த போலீசார்

Published On 2023-11-30 08:11 GMT   |   Update On 2023-11-30 08:11 GMT
  • அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியுடையது என போலீசாருக்கு தெரியவந்தது.
  • 2 மாதமாக தேடி வருவதும் போலீசாருக்கு ெதரியவந்தது.

கடலூர்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டபோது, கடலூர் புதுநகர் போலீசார் பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியுடையது என போலீசாருக்கு தெரியவந்தது. இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் காணாமல் போன தனது மோட்டார் சைக்கிளை 2 மாதமாக தேடி வருவதும் போலீசாருக்கு ெதரியவந்தது.

இந்த நிலையில் பழனிச்சாமி தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை பழனிச்சாமியிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News