உள்ளூர் செய்திகள்

ஓசூரில் சுவாமி விவேகானந்தா எழுச்சி பேரவை சார்பில் ஆன்மீக சொற்பொழிவு

Published On 2022-09-02 15:02 IST   |   Update On 2022-09-02 15:02:00 IST
  • முன்னதாக, கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரின் கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ.க.தொழில்துறை பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ராமலிங்கம், மோகன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

ஓசூர்,

ஓசூரில், சுவாமி விவேகானந்தா எழுச்சி பேரவை சார்பில், ஆன்மீக சொற்பொழிவு நேற்று நடைபெற்றது.

ஓசூர் தர்கா பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் யோக சாந்தி குருகுல நிறுவனர் சுவாமி பிரம்மயோகானந்தா கலந்துகொண்டு, அருளாசி வழங்கி, சொற்பொழிவாற்றினார்.

முன்னதாக, கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரின் கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ.க.தொழில்துறை பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ராமலிங்கம், மோகன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

இதில் விசுவ இந்து பரிஷத் மாநில இணைசெயலாளர் விஷ்ணுகுமார், அன்னையப்பா, மாவட்ட செயலாளர் கிருஷ்ணா, சம்பத், தங்கராஜ், திருமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News