பல்லடத்தில் சனிப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு
- 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
பல்லடம் :
பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு,மகாயாக பூஜை, சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடுகளை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் நடத்திவைத்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதே போல பல்லடம் தண்டபாணி கோவில், பொன்காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட கோவில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.