உள்ளூர் செய்திகள்

சிறப்பு மேலாண்மை கூட்டம் நடந்தது.

சிறப்பு மேலாண்மை கூட்டம்

Published On 2022-08-04 09:30 GMT   |   Update On 2022-08-04 09:30 GMT
  • பரந்த அளவு மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல வகைகள் எந்தெந்த பஞ்சாயத்துகளுக்கு தேவை என்பது குறித்த கலந்துரையாடி தேவைகள் பதிவு செய்யப்பட்டது.
  • காலத்தை வழங்கப்படும் பணிகளுக்கு மட்டுமே நிதி மதிப்பீடு செய்து அரசாணை பெற முடியும் என்பதால் சிறப்பு மேலாண்மை கூட்டம் ஒருங்கிணைத்து நடத்தப்ப ட்டது.

மதுக்கூர்:

மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு, சிராங்குடி, மோகூர், விக்ரமம், வாட்டாகுடி, மூத்தாகுறிச்சி, புளியக்குடி, காரப்பங்காடு, மதுரபாஷனிபுரம், அத்திவெட்டி மற்றும் கல்யாண ஓடை பஞ்சாயத்து களில் இவ்வருடம் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து கிராம வளர்ச்சி க்கும் விவசாயிகள் தன்னிறைவு அடைவதற்கும் தேர்வு செய்யப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி தேவை குறித்து சிறப்பு மேலாண்மை கூட்டம் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன்ராஜு மற்றும் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்களின் கலந்து ரையாடலுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறிய தடுப்பணைகள், சிறிய மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், நீர் அமிழ்வு குட்டைகள், மண் வரப்புகள் அமைத்தல், சி மற்றும் டி வாய்க்கால் தூர்வாரும் பணிகள், சமூக நாற்றங்கள் அமைத்தல், சாலையோரத்தில் மரங்கள் நடுதல், பரந்த அளவு மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல வகைகள் எந்தெந்த பஞ்சாயத்துகளுக்கு தேவை என்பது குறித்த கலந்துரையாடி தேவைகள் பதிவு செய்யப்பட்டது.

வேளாண் உதவி அலுவலர்கள் சுரேஷ், தினேஷ், முருகேஷ், பூமிநாதன், ஜெரால்டு மற்றும் கார்த்திக் ஆகியோர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திரு ந்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் ராஜூ ஐயாமணி, மேலாண்மை கூட்ட உறுப்பின ர்களை பதிவு செய்தனர். பஞ்சாயத்து செயலாளர்கள் அறிக்கை தயார் செய்து வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்க ளிடம் வழ ங்கினர். காலத்தை வழங்கப்படும் பணிகளுக்கு மட்டுமே நிதி மதிப்பீடு செய்து அரசா ணை பெற முடியும் என்ப தால் சிறப்பு மேலாண்மை கூட்டம் இன்றைய தினம் ஒருங்கி ணைத்து நடத்தப்ப ட்டது. மதுக்கூர் வேளாண் உதவி இயக்கு னர் திலகவதி அனைவ ருக்கும் நன்றி கூறினார்.பரந்த அளவு மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல வகைகள் எந்தெந்த பஞ்சாயத்துகளுக்கு தேவை என்பது குறித்த கலந்துரையாடி தேவைகள் பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News