உள்ளூர் செய்திகள்
வெங்காடம்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பூங்கா
- மேலாண்மை பூங்காவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார்.
- விழாவில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றிய வெங்காடம்பட்டி ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பூங்காவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொருள்செல்வி, சரஸ்வதி, தமிழ்செல்வி, விஜயா அம்பிகா, குருசாமி, நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வை யாளர் கார்த்திகேயன், திடக்கழிவு மேலாண்மையின் ஒருங் கிணைப்பாளர் நாகராஜன், மக்கள் நல பணியாளர் மயிலரசன், அரசு ஒப்பந்ததாரர் குமார், தூய்மை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.