உள்ளூர் செய்திகள்

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு

Published On 2023-01-06 10:06 GMT   |   Update On 2023-01-06 10:06 GMT
  • பலத்த காற்றுடன் கூடிய மழை கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
  • கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல், இதனை தொடர்ந்து கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மார்கழி மாதம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று கடலூர் பகுதியில் திடீரென்று மழை பெய்தது இதன் காரணமாக திடீர் மழை கடும் பனிப்பொழிவு சீதோசன மாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் இந்த நிலையில் கடலில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் அலை சீற்றமாக காணப்படுவதால் பொதுமக்களை போலீசார் அனுமதிக்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News