- சமூக நீதி தின கருத்தரங்கம் நடைபெற்றது.
- தலைமை நிலைய செயலாளர் கணேசன் வரவேற்றார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சமூக நீதி பாதுகாப்பு கவுன்சில் சார்பில், சமூக நீதி தின கருத்தரங்கம் நடைபெற்றது.
ஓசூர் வசந்த் நகரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு, மாநில பொதுச்செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாநில இளைஞரணி நிர்வாகிகள் பிரபாகரன் ஆதவன், ஜெகதீஷ், உயர் மட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் கணேசன் வரவேற்றார்.
இதில், மாநில பொருளாளர் முத்துசாமி, தமிழ்ப் பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, வக்கீல் சண்முகம் ஆகியோர் பேசினர்.முன்னதாக, ஓசூர் தாலுக்கா அலுவலகத்திலிருந்து, சமூக நீதி சுடர் ஏந்தியவாறு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதனை மாநில தலைவர் கே.கே சாமி தலைமையில், செயல் தலைவர் ஜானகிராமன் தொடங்கி வைத்தார். மேலும் இதில் திருவாசகன், வெங்கடேசன், பூபதி, முனிரத்னா உள்ளிட்ட நிர்வாகிகள கலந்து கொண்டனர்.