உள்ளூர் செய்திகள்

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

கடையநல்லூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

Published On 2023-04-20 08:55 GMT   |   Update On 2023-04-20 08:55 GMT
  • திரிகூடபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஷீத் பைஜி கிராத் ஓதினார்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் திரிகூடபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திரிகூடபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான, செல்லத்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முத்தையாபாண்டி, கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரிகூடபுரம் தி.மு.க. தெற்கு கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான செய்யது மீரான் வரவேற்றார். முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஷீத் பைஜி கிராத் ஓதினார். நிகழ்ச்சியில் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் முகமது யூசுப், பொருளாளர் வாவா கனி,

சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், கவுன்சிலர் திவான் மைதீன், காளிமுத்து, செய்யது மசூது, யாசின், முருகானந்தம், 2-வது வார்டு கவுன்சிலர் கடல் என்ற செல்லத்துரை இளைஞரணி செயலாளர் சதாம், துணை செயலாளர் அஜ்மீர், கே.ஆர்.யாசின் மற்றும் ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News