உள்ளூர் செய்திகள்

உயர்கல்வியில் தொழில்முனைவோர் திறன் பயிற்சி கருத்தரங்கம்

Published On 2023-09-04 06:45 GMT   |   Update On 2023-09-04 06:45 GMT
  • இளையான்குடியில் உயர்கல்வியில் தொழில்முனைவோர் திறன் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
  • பேராசிரியர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை மற்றும் கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் இணைந்து "உயர்கல்வி யில் தொழில்முனைவு மேம்பாட்டு திறன்" என்னும் தலைப்பில் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை உரையாற்றினார். உதவிப்பேராசிரியர் சமுசுதீன் இப்ராஹிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் ஒருங்கிணைப்பாளர் நசீர்கான், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலீப் உள்ளிட்ட துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் உதவிப்பேராசிரியர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News