உள்ளூர் செய்திகள்

தோரணமலையில் சிலம்ப போட்டிகள்

Published On 2023-10-02 08:47 GMT   |   Update On 2023-10-02 08:47 GMT
  • தோரணமலை அடிவாரத்தில் காந்தி, காமராஜ் உருவ படங்கள் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
  • போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தென்காசி:

கடையம் அருகே அமைந்துள்ள தோரண மலையில் காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு தோரணமலை அடிவாரத்தில் காந்தி, காமராஜ் உருவ படங்கள் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிலம்பு பாப்பையா, சிலம்ப பயிற்சி மாணவர்களின் சிலம்பப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

Similar News