உள்ளூர் செய்திகள்
- ஒரு வாரமாக சாலையில் சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.
- இலக்கியபட்டி பஞ்சாயத்தில் பல முறை புகார்கள் அளித்தும் சரி செய்ய முன்வரவில்லை.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி பஞ்சாயத்து க்குட்பட்ட பிடமனேரி சொசைட்டி காலனி மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருவில் கழிவு நீர் வெளியேறும் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சாலையில் சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.
இலக்கியபட்டி பஞ்சாயத்தில் பல முறை புகார்கள் அளித்தும் சரி செய்ய முன்வரவில்லை. இதன் காரணமாக சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதோடு துர் நாற்றம் வீசிவருகிறது.
ஏற்கனவே பருவநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.