உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவி மாயம்
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே சின்னத்தேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் மகள் விஷ்வஸ்ரீ (வயது 16). இவர் மந்திசுனை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.