உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே பள்ளி மாணவி தற்கொலை

Published On 2023-04-13 05:14 GMT   |   Update On 2023-04-13 05:14 GMT
  • பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் அவரை பெற்றோர் கண்டித்தனர்.
  • மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

தேனி அருகே பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி விலக்கு பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா மகள் பிருந்தா ஸ்ரீ(13). இவர் கடமலைக்கு ண்டு அரசு மேல்நிலை ப்பள்ளி விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் அவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த பிருந்தாஸ்ரீ வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்த னர்.

அதன்பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News