உள்ளூர் செய்திகள்
சத்துவாச்சாரி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, ஈ.பி.நகர்,
வேலூர்:
வேலூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், நாளை (16-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்பு நகர்,ஸ்ரீராம் நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, ஈ.பி.நகர், வசந்தம் நகர் விரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.