உள்ளூர் செய்திகள்

சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வந்த சாம்பவர்வடகரை டிரைவர் பலி

Published On 2024-11-06 18:07 IST   |   Update On 2024-11-06 18:07:00 IST
  • உறவினர் ஒருவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
  • தென்காசி மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

சாம்பவர்வடகரை:

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை உலக்கூட தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் உமாசங்கர்(வயது 30). இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் குழந்தை உள்ளது.

உமாசங்கர் சவுதி அரேபியாவில் கடந்த 1 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று அங்கு அவர் தனது உறவினர் ஒருவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கதறி துடித்தனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு உதவி செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News