உள்ளூர் செய்திகள்

மார்கழி மாதத்தையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு

Published On 2022-12-17 09:49 GMT   |   Update On 2022-12-17 09:49 GMT
  • சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
  • கடந்த சில நாட்களாக முகூர்த்தம், திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதியாக சரிந்து விற்கப்பட்டு வந்தது.

அன்னதானப்பட்டி:

சேலம் பழைய பஸ் நிலையத்தில் வ.ஊ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில நாட்களாக முகூர்த்தம், திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதியாக சரிந்து விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மார்கழி மாதம் நேற்று பிறந்துள்ளது. இதையொட்டி கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்து, விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 800- க்கு விற்ற குண்டு மல்லி இன்று ரூ.1000- க்கு விற்பனை ஆனது. ரூ.500- க்கு விற்ற முல்லை பூ இன்று ரூ.800- க்கு விற்பனை ஆனது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சில பூக்களின் விலை குறைந்தும் உள்ளது. தொடர்ந்து மார்கழி மாதம், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை சமயத்தில் விற்பனை களைகட்டும். இன்றைய பூக்கள் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) வருமாறு:-

குண்டுமல்லி-ரூ.1000, முல்லை- ரூ. 800, ஜாதிமல்லி-ரூ.400, காக்கட்டான்-ரூ.200, கலர் காக்கட்டான்-ரூ.200, மலைக்காக்கட்டான் ரூ.160, அரளி - ரூ. 120, வெள்ளை அரளி-ரூ.120, மஞ்சள் அரளி-ரூ.120,செவ்வரளி-ரூ. 160, ஐ.செவ்வரளி-ரூ.160, நந்தியா வட்டம்-ரூ.200, சி.நந்தியா வட்டம்-ரூ.200,சம்மங்கி -ரூ.40, சாதா சம்மங்கி -ரூ.60.

Tags:    

Similar News