உள்ளூர் செய்திகள்

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் 200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-11-22 15:14 IST   |   Update On 2022-11-22 15:14:00 IST
  • காரில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. .
  • ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள சன்னியாசிகுண்டு மாரியம்மன் கோவில் அருகில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அந்த காரில் 4 சாக்கு மூட்டையில், சுமார் 200 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News