உள்ளூர் செய்திகள்

லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்

Published On 2023-07-26 08:15 GMT   |   Update On 2023-07-26 08:15 GMT
  • கோவையில் இருந்து திருப்பூர் , ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
  • மழை காரணமாக ரெயில் தாமத மானதால் 3 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு வரும் என தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

சேலம்:

கோவையில் இருந்து திருப்பூர் , ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக கோவையில் 8.50 மணிக்கு புறப்பட்டு 12 மணியளவில் சேலத்திற்கு வந்தடையும். இந்தநிலையில் மறு மார்க்கத்தில் மழை காரணமாக ரெயில் தாமத மானதால் 3 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு வரும் என தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனால் இந்த ரெயில் சேலத்திற்கு வழக்கத்தை விட 3 மணிநேரம் தாமதமாக 3 மணியளவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அந்த ரெயிலில் பயணிக்க இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

Tags:    

Similar News