உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் ரூ.7 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2023-08-07 14:10 IST   |   Update On 2023-08-07 14:10:00 IST
  • ஆலங்குளம் பேரூராட்சியில் அமைக்கப்பட்ட சாலையை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு திறந்து வைத்தார்.
  • புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தொடங்கி வைத்தார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் பேரூராட்சி 3-வது வார்டில் பேவர் பிளாக் சாலை திறப்பு மற்றும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

ஆலங்குளம் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலையை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு திறந்து வைத்தார். அப்பகுதியில் பேரூராட்சி பொது நிதி ரூ.7 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜாண் ரவி, பேரூராட்சி உறுப்பினர்கள் எஸ்.டி.சாலமோன்ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், ஆரோக்கியமேரி, காங்கிரஸ் நகரத் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் அருணாசலம், மோகன்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News