உள்ளூர் செய்திகள்

ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை வழக்கு: வெளிமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது

Published On 2022-06-08 15:30 IST   |   Update On 2022-06-08 15:30:00 IST
  • ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை போன வழக்கு.
  • வெளிமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டது.

ஓசூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாவிலிருந்து மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டைனர் லாரியில் கொண்டுசெல்லப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நேரனஹள்ளி நெடுஞ்சாலையில் அந்த லாரியை கடந்த 2020-ம் ஆண்டு மர்ம கும்பல் கடத்தியது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.4லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் சவுகான்,சஞ்சய், நிகல்சிங், புராசவுகன் உள்ளிட்ட மேலும் 4 பேரை சூளகிரி போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News