உள்ளூர் செய்திகள்
வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
- பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
- நாகை மாவட்ட பேரிடர் பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார் . பெண்கள் மற்றும் பேரிடர் குழு உறுப்பினர்களுக்கும் கிராம மக்களுக்கும் நாகை மாவட்ட பேரிடர்பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்பு த்துறை நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன்மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுபயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில்ஊ ராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.