உள்ளூர் செய்திகள்

சீர்காழியில் ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

Published On 2023-06-29 09:40 GMT   |   Update On 2023-06-29 09:40 GMT
  • சீர்காழியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
  • வெள்ளி விழா மாநாட்டை தமிழக முதல்வரை அழைத்து நடத்திட முடிவு செய்துள்ளோம்.

சீர்காழி:

சீர்காழியில் தனியார் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் ரெங்கராஜ் தலைமை வகித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் செல்வராஜன், மாவட்ட பொருளாளர் வேலாயுதன், துணை தலைவர்கள் வேணு கோபால், கிருவேணிநாதன் முன்னிலை வகித்தனர்.

துணை தலைவர் எம்.பக்கிரிசாமி வரவேற்றார்.

மாநில அமைப்பு செயலாளர் மு.பிச்சையப்பா, மாநில பிரச்சார செயலாளர் இ.செல்வராஜ் பங்கேற்று பேசினர்.

மாநில செயற்குழு கூட்டத்தில் சங்கம் தொடங்கி 25ஆண்டு நிறைவடைகிறது.

வெள்ளி விழா மாநாட்டை தமிழக முதல்வரை அழைத்து நடத்திட முடிவு செய்துள்ளோம்.

மத்திய அரசாங்கம் 7வது ஊதியக்குழுவில் நிறைவேற்றிய மூத்த ஓய்வூதியர், இளைய ஓய்வூதி யருக்கும் இருக்ககூடிய ஓய்வூதிய முரன்பாடுகளைய தனியான சிறப்பு கமிட்டி அமைத்து அறிக்கை பெற்று அதனை அமுல்படு த்தியுள்ளது.

அதன்படி தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Tags:    

Similar News