உள்ளூர் செய்திகள்

குறை தீர்க்கும் முகாமில் 83 மனுக்கள் மீது தீர்வு

Published On 2023-11-16 09:50 GMT   |   Update On 2023-11-16 09:50 GMT
  • எஸ். பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.
  • 83 மனுக்கள் பெறப்பட்டு 83 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் நிலத்தகராறு, அடிதடி, பணப்பிரச்சனை,குடும்ப தகராறு உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ். பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 83 மனுக்கள் பெறப்பட்டு 83 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

மேலும் பொதுமக்க ளிடமிருந்து புதிதாக 19 மனுக்கள் பெரப்பட்டுள்ளது

இந்த முகாமில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், காவல் துணைகண்காணிப்பாளர் ராமச்சந்திரன், நாகலிங்கம், காவல் ஆய்வாளர்கள் அன்பழகன், ஷர்மிளா பானு,சரவணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News