உள்ளூர் செய்திகள்

அவரப்பாளையம் சாலையை சீரமைக்க கோரிக்கை

Published On 2023-01-03 05:15 GMT   |   Update On 2023-01-03 05:15 GMT
  • சாலை சிதலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
  • சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரபாண்டி :

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டு வீரபாண்டி பேருந்து நிலையத்திலிருந்து மீனம்பாறை வழியாக அவரப்பாளையம் செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். மேலும் அவரப்பாளையத்தில்எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளதால் இந்த சாலையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலை சிதலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News