உள்ளூர் செய்திகள்

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களை ஏ.சி.பஸ்சில் சென்று பார்க்கலாம்- வருகிற 2-ந்தேதி முதல் ஏற்பாடு

Published On 2023-09-29 08:33 GMT   |   Update On 2023-09-29 08:33 GMT
  • பூங்காவின் நடைபெறும் “வனவிலங்கு வார” கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன.
  • ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.

வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை ரசித்து செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கின் போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. கொரோனோ தொற்று பரவல் முடிந்து வழக்கமாக பூங்கா திறக்கப்பட்டதும் வாகனத்தில் சிங்கங்களை பார்வையிடம் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 3 ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 2-ந்தேதி வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. அன்று பூங்காவின் நடைபெறும் "வனவிலங்கு வார" கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன. சுற்றுலா பயணிகள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்து திறந்த வெளியில் சுற்றும் சிங்கங்களை பார்க்கலாம். ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி வருகிற 2-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 3 ஏ.சி. பஸ்கள் உள்ளன. பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த வாகன த்தில் செல்ல ஒருவருக்கு ரூ.150 கட்டணமாக இருக்கும். இதன் மூலம் பூங்காவில் வருவாய் மேலும் அதிகரிக்கும். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தற்போது பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News