உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-10-26 15:41 IST   |   Update On 2022-10-26 15:41:00 IST
  • தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த புதேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 28).

வாலிபர்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வை சராக வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை பார்த்த போது சுந்த ரராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தூக்கிட்டு தற்கொலை

இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்ப வம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News