உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-06-06 09:01 GMT   |   Update On 2023-06-06 09:01 GMT
  • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்தது
  • பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சி மன்றதலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினர். பின்னர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தனர்.

செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கலைஞர் நகர் பூங்கா, இருளர் காலனி பூங்கா ஆகிய பகுதிகளில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கினார்.

இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News