உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை

Published On 2022-11-23 15:00 IST   |   Update On 2022-11-23 15:01:00 IST
  • மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக நடந்தது
  • மெட்டல் டிெடக்டருடன் தீவிர கண்காணிப்பு

அரக்கோணம்:

கர்நாடகாவில் நிகழ்ந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்வே போலீஸ் இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்கள், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள், பிளாட்பாரம் மற்றும் ரெயில் நிலைய வளாகம் வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் மெட்டல் டிடக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News