உள்ளூர் செய்திகள்

பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Published On 2023-01-10 09:32 GMT   |   Update On 2023-01-10 09:32 GMT
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அரக்கோணம்:

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. சோளிங்கர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி முன்னிலையில் வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் க.சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அரக்கோணம் மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் மக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், மணி, ஜெயசங்கர், கிருஷ்ணன், குணசேகரன், மாதவன், முத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராமசாமி, சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், மாணவர் சங்க செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட பொது குழு உறுப்பினர் கோ.ஏழுமலை மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளரும் கைணூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோ.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News