உள்ளூர் செய்திகள்

அரக்கோணத்தில் ரெயில் பயணியிடம் செல்போன் பறித்தவர் கைது

Published On 2022-10-30 13:47 IST   |   Update On 2022-10-30 13:47:00 IST
  • கூட்ட நெரிசலில் துணிகரம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் அகன் நகர் பகுதியை சேர்ந்த அருள்ராஜ். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் இவரது செல்போனை திருடிச் சென்றார். இது குறித்து அருள்ராஜ் அரக்கோணம் ரெயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடி சென்ற நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடைமேடையில் சுற்றி திரித்து கொண்டிருந்த வாலிபரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் திருவள்ளூரை அடுத்த செவ்வாய்பேட்டை திருவூர் பகுதியை சேர்ந்த அருண் குமார் (வயது 25) என்பதும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து அருண்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News