காதல் ஜோடி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்
- பெற்றோர் எதிர்ப்பு
- கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ஆற்காடு அடுத்த லாடாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா (வயது 19) இவரும் வாலாஜா அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (23) என்ற வாலிபரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.
2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நித்யாவிற்கு திருமணம் செய்வதற்காக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய நித்யா மற்றும் சந்தோஷ் ஆகியோர் கடந்த 22-ந் தேதி பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் பாதுகாப்பு கேட்டு நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ேஜாடிகள் தஞ்சம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் காதல் திருமண ஜோடியை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமரசம் செய்ய முயன்றனர்.
இதில் சமரசம் ஏற்படாததால் நித்யா தனது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.