உள்ளூர் செய்திகள்

தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்து

Published On 2023-06-28 09:25 GMT   |   Update On 2023-06-28 09:25 GMT
  • பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
  • கிரேன் மூலமாக பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை, ஆட்டோ நகர் பகுதியில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை விரிவுபடுத்தாமல் சாலை நடுவே கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை நோக்கி அரசு பஸ் வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

விபத்துக்குள்ளான அரசு பஸ்சை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News