உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2023-09-22 13:39 IST   |   Update On 2023-09-22 13:39:00 IST
  • குளக்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன
  • அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க எடுத்து சென்றனர்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவே ரிப்பாக்கம், நெமிலி, வாலாஜா, சோளி ங்கர், அரக்கோணம் மற்றும் ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்நிலையில், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட பொருளாளர் ரகு, ஆட்டோ சங்க துணை தலைவர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருப்பாளர் தினகரன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ், பொதுச் செயலாளர் ஜெகன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமுருகன், ஆகியோர் கலந்து விஜர்சன ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

இந்த ஊர்வலம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் தொடங்கி, பஜார் வீதி வழியாக சென்று சோமநாத ஈஸ்வரர் கோயில் குளக்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.

Tags:    

Similar News