உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2022-12-16 10:02 GMT   |   Update On 2022-12-16 10:02 GMT
  • ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிக்கினர்
  • போலீசார் விசாரணை

சோளிங்கர்:

சோளிங்கரை அடுத்த ஐபேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந் தம், சப்- இன்ஸ்பெக்டர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட் புதரில் 2 பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமி ருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News