உள்ளூர் செய்திகள்

குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2023-03-26 14:35 IST   |   Update On 2023-03-26 14:35:00 IST
  • தொடர் திருட்டில் ஈடுபட்டனர்
  • ஜெயிலில் அடைப்பு

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி என் கிறசசிகுமார் (வயது 46), திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சின்னநோம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாடு ரமேஷ் (51) ஆகிய இருவரையும் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் இவர்களின் குற்ற ச்செயல்களை கட்டுப்ப டுத்தும் பொருட்டு, ராணிப் பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தர விட்டார்.

Tags:    

Similar News