உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் 24 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

Published On 2023-10-15 13:30 IST   |   Update On 2023-10-15 13:30:00 IST
  • ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் 24 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிக்கப்பட்டது.
  • இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர், மீன்வள துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் (வடக்கு) வழிகாட்டுதலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி, மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் தலைமையில் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், சார் ஆய்வாளர் அய்யனார், மேற்பார்வையாளர் நடேஷ் மற்றும் கடல் அமலாக்கப்பிரிவு காவலர் காதர் இபுராஹிம் ஆகியோருடன் ராமநாதபுரம் டவுன் மீன் மார்க்கெட்டில் ரசாயணம் மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா? என்று இன்று காலை சோதனை செய்யப்பட்டது. இதில் 24 கிலோ கெட்டுப்போன மீன்களை ஆய்வு செய்து அதிகாரிகளால் கைப்பற்றி அழிக்கப்பட்டது. \

மேலும் ரசாயணம் கலந்த மீன்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News