உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்க்க கோரிக்கை

Published On 2023-06-25 09:16 GMT   |   Update On 2023-06-25 09:16 GMT
  • பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்க்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளாார்.
  • முறையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப் பித்துள்ள அனைத்து பொது மக்களுக்கும் எவ்வித தாமத மும் இன்றி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் சான்றிதழ்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவிக்கையில் :-

இ சேவை மையத்தில் சான்றிதழ் விண்ணப்பிக்கும் பொதுமக்கள் முறையாக ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இ சேவை மையத்தில் ஆவணங்களை முறையாக இணையதளங்களில் பதிவு செய்யாததால் எங்களால் தகுந்த ஆவணம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட முடியவில்லை. இதன் மூலம் பொது மக்களுக்கு மிகுந்த தாமதம் ஏற்படுகிறது என் பதை தெரிவித்துக் கொள் கிறோம்.

மேலும் இ சேவை மையத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைத்து ஆவணங்களும் முறையாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறை ஆராய வேண்டும். முறையான ஆவணங்கள் கீழே கொடுக் கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இ- சேவை மையத்தில் ஆவணத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இ சேவை மையத்தில் முறையாக பதிவு செய்யப் பட்ட விண்ணப்பதாரர் களுக்கு சான்றிதழ், பட்டா மாறுதல் போன்றவை 15 நாட்களிலும், முதியோர் உதவித்தொகை சான்றிதழ் பட்டா உட்பிரிவு இனத்திற்கு 30 நாட்களிலும் சான்றிதழ் வழங்கப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, அரசு அலுவலர் களை நேரில் சந்தித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏதேனும் இடையூறு கள் இருந்தால் நேரடியாகவோ மொபைல் மூலமாகவோ விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News