கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசியபோது எடுத்தபடம்.
உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம்
- உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த விழாவில் கலெக்டர், துணை இயக்குநர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் மாற் றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பாக அரசுத் துறைகள் மாற்றுத்திறனாளி கள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 34,215 மாற் றுத்திறனாளிகளுக்கு அடை யாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. இதில் 16,053 மாற்றுத்திறனாளிகளுக்கு உதித் அட்டை வழங்குவதற்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் ஒற்றைச்சாளர முறையில் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை பெறுவ தற்கும் உதித் கணிணியில் பதிவேற்றம் செய்வதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. மாற்றுத்திற னாளிகளின் கோரிக்கை களை பெறுவதற்கு வாரந் தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கென அரசுத்துறைகள் சார்பாகவும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1,763 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட மாக மாற்றுத்திறனாளிகள் உரிமைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.
இக்கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை துணை இயக்குநர் சரளா, மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் பாலசுந்த ரம், பயிற்றுநர்கள் தேவ குமார், சங்கர் சகாயராஜ், மாவட்ட துறை அதிகாரிகள் ஜெரோம், ராஜராஜன், அழகு மன்னன், சுஜித்சிங் உள்ளிட்ட அரசு அலுவலர் கள் தன்னார்வ தொண்டு நிறு வனங்களை சேர்ந்த பி.வி.எம் அறக்கட்டளை, ஜஸ்ட் ஏஞ்சல், ஸ்பீடு, அன் பாலயா, விஜய் ஹீயூ மன் சர்வீஸ், சி.எஸ்.ஐ. ராமேஸ்வ ரம், சி.எஸ்.ஐ. நேசக்கரங்கள், ஓரிக்கோட்டை கருணை இல்லம், ஏர்வாடி செல்ல முத்து அறக்கட்டளை, அருள் சான்று பரமக்குடி, செஞ்சோலை மனநலக் காப்பகம், மாற்றுத்தி றனாளி கள் சங்கத்தைச் சேர்ந்த வேலாயுதம், ஆனந்தி உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.