- பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகத்துடன் மண்டல பூஜை நடந்தது.
- 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.
மண்டல பூஜை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்த பின்பு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சோனையா, கருப்பண சாமி, இருளன், ராக்கச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் அருணாச்சலம், குமார், தங்கராஜ், பாண்டி வேல், கல்யாணசுந்தரம், பாலு, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் செய்தி ருந்தனர். மண்டல பூஜை விழாவை சிவாச்சா ரியார்கள் மனோகர குருக்கள், மகேஷ் குருக்கள் நடத்தினர்.