உள்ளூர் செய்திகள்

கதண்டு கடித்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2023-02-21 08:47 GMT   |   Update On 2023-02-21 08:47 GMT
  • வயலுக்கு சென்ற போது சம்பவம்
  • கதண்டு கடித்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 65) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் வெள்ளைச்சாமி (வயது 40), இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர். அப்போது அருகில் உள்ள செடியிலிருந்து கதண்டு வண்டு பறந்து வந்து இருவரையும் கடித்தது. இதில் காயம் அடைந்து மயக்க நிலையில் சென்ற அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News